இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்ட விதிமுறைகளுக்கிணங்க 2018 சனவரி 01ம் திகதி தொடக்கம் ரோம் தூதரகத்தின் வழியே அல்லது மிலான் கொன்சுயுலேட் வழியே கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் 16 வயது தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட சகலரும் இலங்கை செல்லும் முதற் சந்தர்ப்பத்தின் போதே கொழும்பு, பத்தரமுல்லயில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் பிரதேச அலுவலகங்களுக்கு சென்று தங்களது உயிர்மான தரவுகளை
(கைவிரல் அடையாளத்தை) பதிவு செய்தல் கட்டாய தேவைப்பபாடாகும்.
உயிர்மான தரவுகளை பதிவு செய்ய தவறும் எந்தவொரு நபரும் இலங்கையிலிருந்து வெளியேற இயலாது.
ஆகவே 2018 சனவரி 01ம் திகதி தொடக்கம் ரோம் தூதரகத்தின் வழியே அல்லது மிலான் கொன்சுயுலேட் அலுவலகத்தின் வழியே கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும் சகலரும் கைவிரல் அடையாளத்தை பதிவுசெய்ய ஏற்றவாறு தங்களது பயண ஒழுங்குகளை மேறகொள்ளவும்