படிவம் K -35 A ல் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்

மூல விண்ணப்படிவம் நிகராக பூர்த்திசெய்யப்பட்டு இங்கு கீழ் சொல்லப்படும் சகல​ ஆவணங்களின் பிரதிகளும் இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மூல விண்ணப்பபடிவமானது ஆவணங்கள் சகிதம் மேலதிக பிரதயொன்று எடுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக (Two Sets) சமர்ப்பிப்பட வேண்டும்​​​​

அவசர கடவுச்சீட்டு தேவைப்படுமாயின் 03 தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (ஒரு வருடத்துக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டும்)

​4.5 செ. மீ உயரமும் 3.5 செ. மீ அகலமும் கொண்ட மிக தெளிவான 04 புகைப்பட பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். புகைப்படமானது கடைசி 03 மாதங்களுக்குள் பெறப்பட்டிருத்தல் வேண்டுமென்பதுடன் காதுகள் தெளிவாக தெரிகின்ற,  இருளற்ற , நேர் பார்வை உடைய நிழல்களற்ற, மூக்கு கண்ணாடி அணியாப,  தொகுப்பு செய்யப்படாத, மற்றும் புகைப்படத்தின் பின்னமைந்த வர்ணம் ​அணிந்திருக்கும் உடையின் வர்ணத்திலும் வேறுபட்டிருத்தல் வேண்டும்.

ஆவணங்கள் யாவும் A4 அளவுகொண்ட கடதாசி தாளில் மட்டுமே பிரதி செய்யப்பட்டு சமாப்பிக்கப்படல் வேண்டும். மூல ஆவணங்கள் யாவும் (Original Documents)  தனியாக சமாப்பிக்கப்படல் வேண்டும்(மொழி பெயர்ப்பு  செய்யப்பட்ட பிரதி மூலப் பிரதி ஏற்கப்படமாட்டாத)

  • பிள்ளையின் இலங்கை பிறப்பு சான்றிதழ்

  • வெளிநாட்டில் பிறந்தவராயின் இலங்கை பிரஜாவுரிமை சான்றிதழ் அல்லது ​அதற்கு பணம் செலுத்திய பற்றுச்சீட்டு பிரதி

  • பிள்ளைக்கு பிரத்தியேக கடவுச்சீட்டினை பெற பெற்றோரின்  விருப்பத்தை தெரிவிக்கும் கடிதம்

  • தாய் மற்றும் தந்தையின் தற்போதைய கடவுச்சீட்டு (கடவுச்சீட்டின் (தகவல் பக்கம்) 02,03ம் பக்கங்கள் மற்றும் 08 , 09 பக்கங்களின் பிரதிகள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்)

  • பிள்ளை இத்தாலி நாட்டில் பிறந்திருப்பின் இத்தாலி நாட்டில் வழங்கப்பட்ட பிள்ளையின் பிறப்பு சான்றிதழ்

  • பெற்றோரின் விவாக சான்றிதழ்

  • அல்லது பெற்றோர் பிரிந்து வாழ்வதற்கான நீதிமன்ற கட்டளை

  • பிள்ளையின் தாய் அல்லது தந்தை இறந்திருப்பின் அதற்கான மரண சாட்சி பத்திரம்.

Application Forms